அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல் பள்ளிக் கல்வியில் வணிகமயத்தை கட்டுப்படுத்தக் கோருதல் கல்வியின் தரத்திற்கும்
ஜனநாயக முறைமைக்கும் ஏற்ற ஒரே வழிமுறையான பொதுப்பள்ளி அருகமைப் பள்ளி முறையை கட்டி
அமைக்கும்படி அரசை நிர்பந்திக்க செய்தல். இம்மூன்று
கோரிக்கைகளில் முதல் இரண்டு கோரிக்கைகள் உடனடி கோரிக்கைகள்; ஒன்றுக்கொன்று தொடர்புடைய கோரிக்கைகள் பள்ளிக்
கல்வியை தனியார் பள்ளி நிர்வாகங்களின் லாப வெறியை முடக்கி
போடாமல் மாய்மாலங்களை திருகுதாளங்களை மோசடிகளை கட்டுப்படுத்தாமல் அரசுப் பள்ளிகளை
காப்பாற்றுதல் என்பது சாத்தியமில்லை. அதே சமயம் அரசுப்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் அர்ப்பணிப்பை அதிகரிக்க வேண்டும். இங்கு அங்கென சிற்சில பள்ளிகளில் தங்கள் கடமை உணர்வால் அர்ப்பணிப்பால்
தியாக உள்ளத்தால் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி காலத்திலும்
எழுச்சி கொள்ள செய்திருக்கும் பள்ளி ஆசிரியர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
ஆங்காங்கு தனித்தனியாக எடுக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். “அட இது நமக்கு படலையே இத்தனை நாளாக எப்படி
விட்டோம்” என்று நாம் விட்டுப் போன பணிகளைத் தொடங்க
வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு நிகராக தனியார் பள்ளிகள் நிற்க முடியாது என தடைகளை
தாண்டி நிரூபிக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் சமரசமின்றி அமுல்படுத்த கோரி ஆசிரியர் அமைப்புகள், மாணவர்
இயக்கங்கள், தன்னார்வ இயக்கங்கள்,
பெற்றோர்கள், பொதுமக்கள் கூட்டாகவோ தனித்தனியாகவோ கேட்கத்
தொடங்க வேண்டும்.
பொதுப்பள்ளிக்கு வித்திடும் முதல் கட்ட பணிகளுக்கு தடைகளை
தவிடுபொடியாக்கி தொடக்கப் பள்ளிகளில் மூடுவிழாக்களை முறியடித்து சில அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் வெற்றி கண்டுள்ளனர். அரசுப் பள்ளிகளை பூத்து குலுங்க செய்துள்ளனர்.
அவர்களை அடையாளப்படுத்துவது நமது முதல் கடமை. உங்களுக்கு இது போன்ற பள்ளிகள்
தெரிந்திருந்தால் எங்களுக்கு தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும்
எங்கள் அறிவியல் இயக்க நண்பர்களிடத்தும் ஆர்வலர்களிடமும் கூறி ஆவணப்படுத்தி இந்த
வலைப்பதிவில் பதிவு செய்யலாம். பின்னர் நூலாகவும் வெளியிடுவோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகக்
குறைவான மாணவர் சேர்க்கை இருந்து தற்போது ஆசிரியர்களின் சொந்த முயற்சியால், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியாலும் தூக்கி நிறுத்தியிருக்கும் பள்ளிகளை மட்டுமே இங்கு முதல்கட்ட ஆய்வுக்கு
எடுக்கவிருக்கிறோம். தொடக்கப் பள்ளிகளில் கூட தொடர்ச்சியாக
தொய்விலாது சிறப்பாக நடைபெற்று வரும் பள்ளிகளை இம்முதல்கட்ட ஆய்வில்
ஆவணப்படுத்தவில்லை. அதேபோல் மிக நன்றாக செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளிகள்
மேல்நிலைப் பள்ளிகள் பற்றியும் தற்போதைக்கு ஆய்வுக்குட்படுத்தவில்லை. அழிவின் விளிம்பில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளை எவ்வாறு கடின உழைப்பால்
மீட்டெடுத்தார்கள் என்பதை இனி ஒவ்வொரு பதிவாக பார்க்கலாம்……
நீளும் பயணத்தின் அடுத்த சுவடுகள் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி...
0 comments:
Post a Comment